செல்போனுக்காக பெற்றோருடன் சண்டை.. 7ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை !
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாடு லிபர்டி கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தம்பதி தங்களது நான்கு மகள்களுடன் வசித்து வந்தனர். இதில் 9ஆம் வகுப்பு படித்துவந்த 15 வயது மாணவி, செல்போனில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாக தெரிகிறது. எனவே பெற்றோர் அவரை கண்டித்து உள்ளனர்.
எனினும் மாணவி செல்போனிலேயே மூழ்கி கிடந்துள்ளனர். இதனால் கோபம்அடைந்த பெற்றோர், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியின் செல்போனை பிடுங்கி வைத்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு வெளியே சென்றார். மாணவியை பெற்றோர் தேடி வந்தனர்.
இந்தநிலையில் தான் அவர் லிபர்டி கார்டன் பகுதி கட்டிடத்தில் ஏறி, அங்கிருந்து இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மாணவி ஏற்கனவே ஒரு முறை கையை அறுத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.
மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் இருந்து சிறுமி குதித்தாள். தகவல் அறிந்து சென்ற போலீசார், சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!