பழனியில் குவியும் திரைப்பிரபலங்கள்!! சமந்தா, கௌதம் கார்த்திக், மஞ்சிமாவை அடுத்து சந்தானம்!!

 
சந்தானம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் ஜனவரி 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும்  பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பழனி மலைக் கோவில் எப்போதும் பிரபலங்களால் நிரம்பி வழிகிறது. சாதாரணமாகவே கூட்டம் அலைமோதும்

சந்தானம்

பழனி கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் ஜனத்திரள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன் உட்பட சினிமா பிரபலங்கள் வருகை தந்தனர். அந்த வரிசையில் தற்போது நகைச்சுவை நடிகர்  சந்தானம் பழனி மலை கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.  பழனிக்கு வந்த சந்தானம் முதலில் மலையடிவாரத்தில் உள்ள 3 கீலோ மீட்டர் கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்தார். அதன் பிறகு ரோப்கார் மூலமாக மலைமேல்  முருகனை தரிசனம் செய்தார்.

சந்தானம்
கோவில் நிர்வாகம் சார்பில் தரிசனம் முடிந்த பிறகு நடிகர் சந்தானத்திற்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது. பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  தான் “வடக்குப்பட்டி ராமசாமி” படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  படப்பிடிப்பு விறு விறுப்பாக ஒருபுறம் நடந்து வரும் நிலையில்  பக்கத்தில் தான் பழனி முருகன் கோவில் என்பதால் தரிசனம் செய்ய வந்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் பதிவிட்டு வருகின்றனர். அவர் பழனி கோவிலில் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web