தலைமைச் செயலகத்தில் பேரவை நுழைவுவாயிலில் திடீரென தீ அலாரம் ஒலி... பெரும் பரபரப்பு!

தமிழகத்தில் தலைமைச் செயலகத்தில் பேரவை வளாக நுழைவுவாயிலில் திடீரென தீ விபத்து அலாரம் எழுப்பியது. தீயணைப்புத்துறையினரால் பொருத்தப்பட்ட தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் திடீரென ஒலி எழுப்பியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நுழைவாயில் அருகே தீயணைப்புத்துறையினரால் பொருத்தப்பட்டு இருந்த தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் திடீரென ஒலித்ததால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பரிசோதனை செய்ததில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த அலாரம் ஒலித்துள்ளது. மற்றபடி எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் சரி செய்யப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!