முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து… 16 பேர் உடல் கருகி பலியான சோகம்!

 
இந்தோனேஷியா

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணம் மனாடோ நகரில் இயங்கி வந்த முதியோர் இல்லம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 16 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

முதியவர்கள் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்ததால், அவர்களால் அறையை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி தவித்தனர். மீட்பு பணியினர் தீயை அணைக்க போராடிக் கொண்டிருந்த நிலையில், அறைக்குள் தீயில் சிக்கிய 16 பேரும் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். 

இந்தோனேஷியா

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த மேலும் 15 பேர் மனாடோவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியா

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆறு தீயணைப்பு லாரிகளுடன் வந்த வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தீ விபத்துக்கான துல்லிய காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!