ஹைதராபாத்தில் பிரபல மாலில் பயங்கர தீ விபத்து... அலறிய மக்கள்!

ஹைதராபாத்தில், சந்தன் நகரில் உள்ள பிரபல மாலில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தீ பரவ தொடங்கியதும் உடனடியாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்தன்நகர் காவல்துறை மற்றும் பட்டன்செரு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தீ, மல்டிப்ளெக்ஸ் மாலின் 5 தளங்களிலும் பரவி கட்டிடத்தை அழித்து, பக்கத்திலிருந்த கடைக்கும் பரவியது. கிட்டத்தட்ட 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரவு 10.30 மணி வரைப் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் பிரதான சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மியாபூர் மற்றும் பிஹெச்இஎல் நோக்கிச் செல்லும் சாலையில் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சைபராபாத் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!