ராஜஸ்தானில் தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு... ஜன்னல் வழியே குழந்தையை தூக்கி வீசிய தாய்!

 
ராஜஸ்தானில் தீ விபத்து

 

ராஜஸ்தான்  மாநிலம், ஜெய்ப்பூர் அஜ்மீரில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கிய தாய், தனது குழந்தையைக் காப்பாற்றுவதற்காக ஜன்னல் வழியே குழந்தையை தூக்கி கீழே வீசினார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 5 மாடி கட்டடத்தில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஹோட்டல் நாஸில் இன்று காலை 8 மணிக்கு டிகி பஜார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில்  ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

தீ விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளனர்" என்று ஜேஎல்என் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் சமாரியா தெரிவித்தார் .

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறுவதைக் காட்டுகின்றன.  தீ விபத்து நடந்த நேரத்தில் ஹோட்டலில் 18 விருந்தினர்கள் தங்கியிருந்ததாகவும், அவர்களில் சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜன்னல்களிலிருந்து குதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 "ஒரு பெண் தன் குழந்தையை மாடியின் ஜன்னலிலிருந்து காப்பாற்றுவதற்காக தூக்கி ஜன்னல் வழியே எறிந்தாள். அவளும் கட்டிடத்திலிருந்து குதிக்க முயன்றாள். ஆனால் நாங்கள் அவளைத் தடுத்தோம்" என்று ஹோட்டலில் தங்கியிருந்த மங்கிலா கலோசியா என்பவர் தெரிவித்தார் .

ராஜஸ்தானில் தீ விபத்து

ஹோட்டலுக்குச் செல்லும் குறுகிய அணுகு சாலை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூடுதல் எஸ்பி ஹிமான்ஷு ஜாங்கிட் தெரிவித்தார். ஹோட்டலில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முயன்றபோது பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மயக்கமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணி முடிந்து விட்டதாகவும், தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிட்டதாகவும் தலைவர் கஜேந்திர சிங் ரத்தோர் பின்னர் தெரிவித்தார். மீட்பு பணிகளும் முடிந்தது. உள்ளே வேறு யாரும் இல்லை. மின் பேனலில் இருந்து தீப்பிடித்ததாகவும், அது சிறிது நேரத்தில் பெரிதாகி விட்டதாகவும் ஹோட்டல் மேலாளர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web