சபரிமலை செல்லும் இந்தியாவின் முதல் ஜனாதிபதி... மே 18ல் தரிசனம் செய்கிறார் திரவுபதி முர்மு!

 
 சபரிமலை செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் மே 18ம் தேதி முதன்முறையாக சபரிமலை தரிசனத்திற்காக கேரளா செல்ல உள்ளார். சபரிமலைக்கு செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா செல்ல உள்ளார்.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையை ஒட்டி, சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை

ஜனாதிபதி வருகையை ஒட்டி, சபரிமலை கோவிலில் சீரமைப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலைக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் செல்வது இதுவே முதன் முறையாகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web