தமிழக மீனவர் வலையில் சிக்கிய 51 கிலோ எடை கொண்ட கூறல் மீன்கள்... ரூ.1,27,500க்கு விற்பனை!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனின் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து புறப்பட்ட மீனவர்களின் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் இரண்டு சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 51 கிலோ எடை கொண்ட இந்த கூறல் மீன்கள் இரண்டும் சேர்த்து ரூ.1,27,500-க்கு விற்பனையானது.
நேற்று பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியிலிருந்து 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இன்று மார்ச் 12ம் தேதி காலை மீனவர்கள் மீன் பிடித்து முடித்து விட்டு கரைக்குத் திரும்பினார்கள். இதில் ஒரு மீனவர் வலையில் 22 கிலோ மற்றும் 29 கிலோ எடைக் கொண்ட இரண்டு கூறல் மீன்கள் சிக்கின அதிர்ஷ்டமானதாக பார்க்கப்படுகிறது. மிகவும் அரிய வகையான இந்த கூறல் மீன்கள் 51 கிலோ எடை கொண்ட நிலையில், ஒரு கிலோ ரூ.2,500 வீதம் மொத்தமாக ரூ.1,27,500க்கு ஏலம் போனது.
'இந்த கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவதில்லை. கூறல் மீனின் வயிற்று பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (fish maws) நெட்டி காணப்படும். இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மது பானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவைகளில் சுவைக்காகவும், அவை சீக்கிரமாக கெட்டு போகாமல் இருக்கவும் பயன்படுத்துகின்றனர். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது' என்று கூறல் மீன் குறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறினார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!