தண்டவாளத்தில் கல் வைத்து விளையாடிய 5 மாணவர்கள் கைது!

 
ரயில் தண்டவாளம்
 


சென்னையில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு கோவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. 

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் 2 அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்தது. ரயில் அதன் மீது ஏறியதும் கல் நொறுங்கியது.

ரயில் தண்டவாளம் நடைமேடை ப்ளாட்ஃபாரம்

இது குறித்து இன்ஜின் ஓட்டுநர் கோவை ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் தலைமையிலான ஆர்பிஎப் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது அங்கு தண்டவாளத்தில் அமர்ந்திருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும், 18 வயது நிரம்பாதவர்கள் என்பதும் தெரியவந்தது. கான்கிரீட் கல்லை விளையாட்டுக்காக தண்டவாளத்தில் வைத்ததாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web