இளம்பெண்ணுடன் உல்லாசம்... நெருக்கமான வீடியோவைக் கணவனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன்!

 
உல்லாசம்

தேனி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து, அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை அந்தப் பெண்ணின் கணவருக்கே அனுப்பி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட கள்ளக்காதலனைச் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு, கடந்த 2020-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இந்தப்D தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திருமணமான சில வருடங்களிலேயே, மனைவி சமூக வலைதளங்களில் அதிகம் 'ரீல்ஸ்' வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

காவலர்கள் இருவர் உல்லாசம்

இந்தத் தகராறின் காரணமாக இருவரும் கடந்த சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவரைப் பிரிந்த அந்த இளம்பெண் தனது தாய் வீடான உத்தமபாளையத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில், இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கணவர், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், கணவரைப் பிரிந்து இருந்த அந்தப் பெண்ணுடன் பள்ளியில் படித்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராம்நகர் பூத்தாம்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி (32 வயது) என்பவருக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மருதுபாண்டி, தேனிக்கு விற்பனைப் பொருட்களை விற்க வந்தபோது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

உல்லாசம்

இளம்பெண் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததை அறிந்த மருதுபாண்டி, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். அவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்தப் புதிய பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

இளம்பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய மருதுபாண்டி, இருவரும் இருந்தபோது சில தனிப்பட்ட வீடியோக்களை ரகசியமாக எடுத்து வைத்துள்ளார். இளம்பெண்ணின் கணவர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய நிலையில், மருதுபாண்டி அந்த வீடியோக்களை இளம்பெண்ணின் கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த வீடியோக்களைப் பார்த்த கணவர் அதிர்ச்சி அடைந்தார். தனது குடும்ப வாழ்க்கையைச் சீர்குலைத்து, தனிப்பட்ட வீடியோக்களை அனுப்பிய மருதுபாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் உடனடியாகத் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மருதுபாண்டியை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!