பாமகவைத் தொடந்து மதிமுகவிலும் குடும்ப பஞ்சாயத்து.... துரை வைகோவை சமாதானம் செய்கிறார் வைகோ!

பாமவில், அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது மதிமுவிலும் குடும்பத்திற்குள் கருத்து மோதல்கள் வெடித்துள்ள நிலையில், தனது கட்சிப் பதவியைத் துறப்பதாக அறிவித்திருந்தார் வைகோ மகன் துரை வைகோ.
கட்சியின் மூத்த தலைவருக்கும் துரை வைகோவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிக்கை வெளியிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வைகோ மகன் துரை வைகோவிற்கு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அன்புக் கட்டளையிட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வைத்து துரை வைகோவை வைகோ சமாதானம் செய்து வருவதாகவும், பதவி விலகல் முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பு கட்டளையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!