அடி தூள்!! வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!! இனி அலையத் தேவையில்லை!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் படி இந்தியக் குடிமகன் எவரும் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் ரேஷன் கடைகள் மூலம் பயனடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவால் இனிமேல் ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்புக்கள் குறைவு. அதனைப் போலவே நாடு முழுவதும் அனைத்து பயனர்களுக்கும் சரியான முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு தராசுகளுடன் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்து பயனாளிகள் முழு அளவில் உணவு தானியங்களைப் பெற வழிவகை செய்துள்ளது. எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. தற்போது செயல்படுத்த உள்ள 'மொபைல்' ரேஷன் கடை திட்டம் மே மாதம் முதல் செயல்படுத்த உள்ளது.
தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் சொந்தமாக வாகனங்களை வாங்கி, அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி இருக்க வேண்டும். இதன் மூலம் படிப்படியாக தனியார் வாகன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துச்செல்லும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், வாங்கும் வாகனங்களை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்ட வேண்டும். இது தவிர அந்தந்த பகுதிகளில் வார்டு வாரியாக, மொபைல் ரேஷன் கடைகளை பிரித்து, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!