அடி தூள்!! ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்!!

 
ஆன்லைன் ரம்மி

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் அநேகம் பேர் கடனாளியாக அதனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் அதனை உடனடியாக தடை செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது மீண்டும் சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

ஆன்லைன் ரம்மி

சமீபத்தில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் இயற்றப்பட்டுள்ளன.இதன்படி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, போக்கர் விளையாட்டுகளை விளையாடுவோரை எச்சரிக்கும் வகையில் நிறுவனங்களே கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் விளையாடுபவர்களின் இருப்பிடங்கள் கண்டறியப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கட்டுப்பாடுகளின்படி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட முயன்றால் எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றும். எச்சரிக்கையை மீறி ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை விளையாடுபவர்கள் மீது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ரேடியோ அலைவரிசை, வைபை, இணையம்  மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவது தடுக்கப்படும். சட்டத்தை மீறி தமிழகத்தில் விளையாட்டுகளை நடத்துவதை அனுமதிக்கப்போவதில்லை எனவும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web