வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனித உரிமை குற்றத்தில் குற்றவாளி... பரபரப்பு தீர்ப்பு!

 
ஷேக் ஹசீனா
 

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் அரசு எதிர்ப்பாளர்கள் பலர் கொல்லப்பட்டதற்கு நேரடி உத்தரவு வழங்கியதாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவாத தீர்ப்பாயம் குற்றவாளி என இன்று அறிவித்தது. 2024 ஜூலை-ஆகஸ்டில் நடந்த கலவரங்களில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மனித உரிமை மீறலுக்கான மிகப்பெரிய வழக்கில் முதன்முறை ஹசீனாவே நேரடியாக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா

ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சியின் இறுதியில் வேலைவாய்ப்பு ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறி நாடு முழுவதும் பரவியது. பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கிச் சூடு செய்ய ஹசீனா உத்தரவிட்டதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது. ஆட்சியிழந்த அவர் ஆகஸ்ட் 5 அன்று இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், டாக்காவில் இன்று அவர் இல்லாமலேயே விசாரணை நடைப்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஹசீனா

இந்த வழக்கில் ஐந்து முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. தண்டனை விவரம்—சிறை அல்லது மரண தண்டனை—விரைவில் அறிவிக்கப்படுகிறது. மரண தண்டனை கோரப்பட்டுள்ள நிலையில், தீர்ப்புக்குப் பின் வங்கதேசத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தாம் குற்றமற்றவர், இது அரசியல் பழிவாங்கல் என்று ஹசீனா முன்பே தெரிவித்திருந்ததையும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!