முன்னாள் டிஜிபியை கட்டிவைத்து மிளகாய்ப் பொடி தூவி கண்ணாடி பாட்டிலால் குத்திக் கொலை.... மகன் பரபரப்பு வாக்குமூலம்!

 
முன்னாள் டிஜிபியை கட்டிவைத்து மிளகாய்ப் பொடி தூவி கண்ணாடி பாட்டிலால் குத்திக் கொலை.... மகன் பரபரப்பு வாக்குமூலம்!

கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் டிஜிபி அதிகாரி ஓம் பிரகாஷ். இவர் , 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 68 வயதான ஓம் பிரகாஷ், நேற்று பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலத்தில் வயிறு மற்றும் மார்பில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

 

இச்சம்பவம் குறித்து பிரகாஷின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், அவரது மனைவிதான் முக்கிய சந்தேக நபர் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரும், அவரது மகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். 

முன்னாள் டிஜிபியை கட்டிவைத்து மிளகாய்ப் பொடி தூவி கண்ணாடி பாட்டிலால் குத்திக் கொலை.... மகன் பரபரப்பு வாக்குமூலம்!

இதுகுறித்து ஓம் பிரகாஷின் மகன் கார்த்திகேஷ், “எனது அம்மா பல்லவி, கடந்த ஒரு வாரமாக என் தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்தார். என் அம்மா பல்லவியும், என் சகோதரி கிருதியும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடிக்கடி என் தந்தையுடன் சண்டையிடுவார்கள். என் தந்தையின் கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று நான் உறுதியாக சந்தேகிக்கிறேன். இச்சம்பவம் நடந்தபோது நான் வெளியூரில் இருந்தேன். பக்கத்து வீட்டுக்காரர் சொன்னபிறகே நான் விரைந்து வந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பல்லவி ஓம் பிரகாஷின் மீது மிளகாய்ப் பொடியை வீசி, கட்டிவைத்து, கண்ணாடி பாட்டிலால் தாக்கி, குத்திக் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. அவரைக் குத்திக் கொன்ற பிறகு, அவரது மனைவி மற்றொரு போலீஸ்காரரின் மனைவியிடம் தனது கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் டிஜிபிக்கும் அவரது மனைவிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அது உடல்ரீதியான மோதலாக மாறி கொலைக்கு வழிவகுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொலையில் அவர்களின் மகள் கிருதிக்கு பங்கு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, "ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவிதான் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்பது முதற்கட்டத் தகவலாக வெளியாகியுள்ளது. ஆனால் அது விசாரணையில் உள்ளது. நாம் காத்திருக்க வேண்டும். 2015ல் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது அவர் என்னுடன் பணிபுரிந்தவர். அவர் ஒரு நல்ல அதிகாரி மற்றும் நல்ல மனிதர். இது நடந்திருக்கக்கூடாது. விசாரணையில் எல்லாம் வெளிப்படும்" எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web