முன்னாள் திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்... தொண்டர்கள் அதிர்ச்சி!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்ம்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈ.கோதண்டம் (99) உடல்நலக்குறைவால் இன்று நவம்பர் 12ம் தேதி பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ-வான ஈ.கோதண்டம்(99) கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவர் 1989 -91 மற்றும் 1996 - 2001 என இரண்டு முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவையில் திமுக சார்பில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்வு பெற்றிருந்தார். 1991ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கோதண்டம் மறைவுக்கு திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது இறுதிச் சடங்கு நாளை நவம்பர் 13ம் தேதி குன்றத்தூரில் நடைபெற உள்ளது. இவருக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். கோதண்டத்தின் மகன் கோ.சத்தியமூர்த்தி தற்போது குன்றத்தூர் நகராட்சி தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
