முன்னாள் நிதியமைச்சர் மனைவி நளினி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் !
இது குறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது... சாரதா குழுமம் 2013 வரை நடத்திய சிட்பண்ட் மோசடியால். மேற்கு வங்கம். அசாம், ஒடிஷா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் ரூபாய் 2 ஆயிரத்து 459 கோடி மோசடி செய்யப்பட்டது.
அரசுத் துறைகளின் நடவடிக்கையால், ஏறக்குறைய ரூபாய் 500 கோடி மீட்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்குத் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நளினி சிதம்பரம் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, சொத்துக்கள் மற்றும் ரூபாய் 3 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் முதலீட்டாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு கட்டமாக சாரதா குழுமம் மற்றும் இந்த மோசடியால் லாபமடைந்தது
நளினி சிதம்பரம், தேபப்ரதா சர்க்கார், முன்னாள் எம்எல்ஏ தேபேந்திரநாத் பிஸ்வாஸ், முன்னாள் எம்எல்ஏ தேபேந்திரநாத் பிஸ்வாஸ், அமைச்சர் மறைந்த அஞ்சன் தத்தா குடும்பத்தினருக்குச் சொந்தமான அனுபூதி பிரிண்டர்ஸ் மற்றும் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இதில் அடங்கும் இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க