முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகல்!

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், முன்னாள் அதிமுகஅமைச்சர், ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இச்சம்பவம் அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பாஜக கூட்டணிக்கு முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருபவர் . கடந்த தேர்தலில் தனது தோல்விக்கு காரணமேக, அதிமுக பாஜக கூட்டணிதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி வந்தார்.
ஆனால், அவரது கூற்றுக்கு மாறாக 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இதற்காக மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட உள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால், கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சி தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!