நடுவானில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு... அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

சீனாவில், ஷாண்டாங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உள்நாட்டு விமானம் கிங்டாவோவிலிருந்து ஷாங்காய் நகருக்கு சென்று கொண்டிருந்தது. திடீரென நடுவழியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் நாங்சிங் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதிலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென துர்நாற்றம் வீசியதாகவும், விமானத்தில் அதிக சத்தம்கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், மற்றொரு பயணி கூறுகையில், விமானத்தின் இடதுபுற எஞ்சினில் ஏதோவொன்று இழுக்கப்பட்டு சிக்கி கொண்டதாகவும், அதையடுத்து சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்கு அது எரிவதைப் போல் துர்நாற்றம் உண்டானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விமானத்தின் பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு, அவர்களது பயணத்தைத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!