பொய், பொய்யி... யாரும் நம்பாதீங்க... இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி!

 
அலெர்ட்
இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் பதற்றம் நிலவி வருகிறது.  

ஜம்மு காஷ்மீர்

உலக நாடுகள் தலையிட்டு இந்த விவகாரத்தில் சமரசம் செய்யும் முயற்சிகளும் நடந்து வருவதாக தெரிகிறது. இந்திய ராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

காஷ்மீர் மெளன அஞ்சலி
இந்நிலையில் போரில் ஈடுபட உள்ள இந்திய ராணுவத்திற்கு நன்கொடை உதவி வழங்கும்படி  மோசடி லிங்க் உடன் கூடிய வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் மொபைல் குறுஞ்செய்திகள் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற நன்கொடை எதையும் பெறவில்லை என்றும் மோசடி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web