10000 சுகாதார பணியாளர்களுக்கு இலவச இன்புளூயன்சா தடுப்பூசி!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது சுகாதார பணியாளர்களுக்கு இலவச இன்புளூயன்சா காய்ச்சல் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சைதை தொகுதி திடீர் நகர் மற்றும் கோதாமேடு பகுதி மகளிர் உதவிக் குழு நிர்வாகிகளுடன் மகளிர் விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #Saidapetconstituency pic.twitter.com/V9uvfVBTbO
— Subramanian.Ma (@Subramanian_ma) March 25, 2023
அதில் தமிழகத்தை பொறுத்தவரை 'இன்புளூயன்சா' வைரஸ் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் இந்தியா முழுமைக்கும் பாதிப்பு ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது, அதற்குரிய நடவடிக்கை எடுப்பது என்ற வகையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக வைரஸ் காய்ச்சல்களுக்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் 14,13,460 பேர் பயன்பெற்றுள்ளனர்.
8,775 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது குணம் அடைந்து வருகின்றனர். காய்ச்சல் பாதிப்புகள் இந்த நடவடிக்கைகளின் மூலம் படிப்படியாக குறைந்து வருகிறது. முதல்வரின் வழிகாட்டுதலின்படி 'இன்புளூயன்சா' காய்ச்சல் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க