சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி.!

 
ரயில்கள்


 ஜார்க்கண்ட் மாநிலத்தில்  சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் பர்ஹைட்  பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 லோகோ பைலட்டுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிகாலை 3.30 மணிக்கு விபத்து ஏற்பட்டு ரயில்கள் தீப்பிடித்ததால் 2 பேரும் உடல் கருகி உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி  வருகின்றனர். மின்சார உற்பத்தி நிறுவனமான NTPC-யால் இயக்கப்படும் இரண்டு ரயில்களும், விபத்து நடந்த தண்டவாளங்களும் NTPC-க்குச் சொந்தமானவை எனக் கூறப்படுகிறது.


அந்த ரயில்கள்  மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்த விபத்து குறித்து  கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கௌசிக் மித்ரா  “சரக்கு ரயில்கள் மற்றும் தண்டவாளம் இரண்டும் NTPC-க்கு சொந்தமானது. இதற்கும் இந்திய ரயில்வேக்கும் எந்த தொடர்பும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web