பெரும் சோகம்.. திடீரென வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ்! தீயில் கருகி போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி!

 
சாந்தி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் சபரிநாத்(41). இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்த சபரிநாத், சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 

உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த 3ஆம் தேதி இன்ஸ்பெக்டர் சபரிநாதன் மருத்துவ விடுப்பு பெற்று சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று காலை அவர் வீட்டில் குடியிருந்த சாந்தி என்ற பெண் சபரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் சபரிநாத் வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

சாந்தி

இதில் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு இன்ஸ்பெக்டர் சபரிநாத் சம்பவயிடத்திலேயே பலியானார். 

உடனடியாக தீயணைப்புத்துறையினர், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தனர். ஆனால் சபரிநாத், சாந்தி இருவரும் உயிரிழந்துவிட்டனர். போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் உரிய ஆய்வுக்குப் பிறகே ஃபிரிட்ஜ் கோளாறால் விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு ஏற்பட்டதா என்பது உறுதியாகத் தெரியும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. 

சாந்தி

சமீபத்தில்தான் சபரிநாத்தின் மனைவி உடல்நலக் குறைவால் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்தில் சிக்கி இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web