“தனிமையில் உல்லாசம்...” நடுரோட்டில் இளம்ஜோடியை இரும்பு கம்பியால் தாக்கிய மக்கள்!
உத்திரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் கெசர்பூர் கிராமத்தில், திருமணமான இளம்பெண் ஒருவர், வேறொரு வாலிபருடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். உறவினர்கள் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததையறிந்து, இரும்பு கம்பியால் இருவரையும் கட்டி வைத்து தாக்குகின்றனர்.
संभल में प्रेमी–प्रेमिका को हाथ बांधकर पीटा गया, भीड़ तमाशबीन खड़ी देखती रही। Video के आधार पर पीटने वालों को चिह्नित कर रही पुलिस। दोनों में कई साल से प्रेम प्रसंग था। आज फैमिली वालों ने इन्हें कमरे में पकड़ लिया।
— Sachin Gupta (@SachinGuptaUP) March 23, 2025
⚠️ Trigger Warning: Disturbing Visual⚠️ pic.twitter.com/VVxwy0rAcb
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இளம்பெண், தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் அறைக்குள் உல்லாசமாக இருக்கும் போது அதனை உறவினர்கள் பார்த்து விட்டனர். பின்னர் உறவினர்கள் ஒன்று சேர்ந்து, அவர்கள் இருவரையும் ஒரு கயிற்றில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் அடித்து தாக்குகிறார்கள். நடுத்தெருவில் கள்ளக்காதல் ஜோடியை கயிறால் கட்டி வைத்த நிலையில் அந்த ஆணை அவருடைய மனைவியும், இளம்பெண்ணை அவருடைய கணவனும் இரும்பு கம்பியால் அடித்து தாக்குகிறார்கள்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஜோடி கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாலும் இப்படி பொதுவெளியில் முரட்டுத்தனமாக தாக்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவின் அடிப்படையில் அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
