பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு... பிரதமர் மோடியிடம் புதின் உறுதி !

 
மோடி புதின்
 

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின் போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக புதின், மோடியிடம் ஆலோசனை நடத்தினார். பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த புதின், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மோடி - புதின்

மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கூறிய புதின், இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளர்.மேலும் இந்தியா - ரஷ்யா உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியும் புதினும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ரஷ்யா- இந்தியா இடையேயான வருடந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடி அமைச்சரவை

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு பங்களிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web