காதலி கொடூரம்!! காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை!!

 
லட்சுமி பிரியா

பார்க்காமலே காதல், பேசாமலே காதல், கடிதம் மூலம் காதல் என தொடங்கி இண்டர்நெட் காலம் வரை வந்து விட்டது. இப்போதெல்லாம் காதலனோ , காதலியோ ஒத்து வரவில்லை என்றால் அவள் அல்லது அவனை சித்ரவதை செய், ஆசிட் வீசு, துண்டுதுண்டாக கொலை செய் என பயங்கரமாகி விட்டது. கேரள மாநிலத்தில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் லட்சுமி பிரியா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் காதல் ஏற்பட்டது.  இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்  லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் மற்றொரு  மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் அந்த மாணவரை லட்சுமிபிரியா காதலிக்க தொடங்கினார். இதனால் முதல் காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் மனம் உடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை சந்தித்து தன்னுடனான காதலை கைவிடக்கூடாது எனக் கெஞ்சினார்.

லட்சுமி

இதனால் கூலிப்படையை ஏவி முதல் காதலனை காரில் கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து வீடியோ எடுத்தார்.  2வது காதலன் மீதான மோகத்தில் முதல் காதலனை மறந்த லட்சுமி பிரியா, அவரை தன்னுடன் பேச வேண்டாம் எனவும் மீறி பேசினால் தொலைத்து விடுவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் முதல் காதலன் லட்சுமி பிரியாவை தொடர்ந்து சந்திக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா நேற்று முன்தினம் முதல் காதலனை சந்திக்க வருமாறு அழைத்தார். அவரது பேச்சை நம்பி லட்சுமி பிரியா அழைத்த இடத்திற்கு முதல் காதலன் சென்ற போது  அங்கு லட்சுமி பிரியாவுடன் 2வது காதலனும் இருந்தார். இருவரும் அவர்களின் கூட்டாளிகள் துணையுடன் முதல் காதலனை சரமாரியாக தாக்கி ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்றனர். ஒரு நாள் முழுவதும் அவரை விடாமல் சித்ரவதை செய்தனர். அவரை நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு போட்டனர். பின்னர் அவரது செல்போனை பறித்து கொண்டு கையில் இருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

போலீஸ்

அதே நேரத்தில் மகனை காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய போது, அவர் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது  கண்டறியப்பட்டது.  அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து  விசாரணை நடத்தினர். இதில் அவரை முன்னாள் காதலி, அவரது 2வது காதலனுடன் சேர்ந்து கடத்தி சென்று சித்ரவதை செய்ததை வாக்குமூலம் அளித்துள்ளார்.லட்சுமி பிரியாவை பிடிக்க போலீசார் முயற்சி செய்தனர். மொபைல்  சிக்னல் மூலம் அவர் எர்ணாகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்து அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். அவரது 2வது காதலன் மற்றும் 4 கூட்டாளிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து லட்சுமி பிரியாவின் தாயாரிடம் கேட்ட போது  இந்த தாக்குதலில் தனது மகளுக்கு எந்தப் பங்கும் இல்லை.  மர்ம கும்பல் தாக்கும் போது அவரை அடிக்க வேண்டாம் என எனது மகள் கூறி உள்ளார்.அந்த கும்பலில் உள்ளவர்களின் விவரம் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web