குடையோடு கிளம்புங்க... இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம்.ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
