அரசுப் பேருந்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் சிக்கிய வாலிபர்கள்!

 
தங்கக்கட்டி

கேரள மாநிலம் பாலக்காடு அருகே தமிழக எல்லையான வாளையாரில், அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கேரளாவில் சட்டவிரோதத் தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க வாளையார் சோதனைச் சாவடியில் கலால் துறையினரும் (Excise Department) காவல்துறையினரும் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று கோவையிலிருந்து கொட்டாரக்கரை நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்தை அதிகாரிகள் மறித்துச் சோதனை நடத்தினர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

அந்தப் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வைத்திருந்த பைகளைத் திறந்து சோதனை செய்தபோது, அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்தவை அனைத்தும் பிஸ்கட் வடிவிலான தங்கக் கட்டிகள். அவற்றைக் கொண்டு செல்வதற்கான எந்தவிதமான முறையான ஆவணங்களும் அந்தப் பயணிகளிடம் இல்லை. விசாரணையில் அவர்கள் மும்பையைச் சேர்ந்த சங்கித் அஜய் ஜெயின் (28) மற்றும் ஹிதேஷ் சிவராம் சேலங்கி (23) என்பது தெரியவந்தது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

அவர்களிடமிருந்து மொத்தம் 8 கிலோ 696 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிடிபட்ட இருவரும் இந்தத் தங்கத்தை யாரிடம் கொடுப்பதற்காகக் கொண்டு சென்றார்கள், இதன் பின்னணியில் உள்ள ஹவாலா கும்பல் எது என்பது குறித்து கலால் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மேலதிக நடவடிக்கைக்காக ஜி.எஸ்.டி (GST) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில் அரசுப் பேருந்தைப் பயன்படுத்தி நடந்த இந்த மெகா கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!