தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.
வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.360 குறைந்தது. நேற்று சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ45 உயர்ந்துள்ளது.இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ8975க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.71,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
