மீண்டும் ரூ45000ஐ கடந்த தங்கம்!! நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!!
இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ10 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ5630க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளின் விலையும் கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ80.40க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ80400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தில் முதலீடு என்பது பல வருடங்களாகவே பாரம்பரிய, பாதுகாப்பான பழக்கமாகவே இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையிலும் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது.
தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு.அமெரிக்க பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!