தங்கம் விலை உயர்வு!! அக்ஷய திரிதியை தினத்தில் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
நாளை இந்தியா முழுவதும் அக்ஷய திரிதியை கொண்டாடப்படும் வேளையில் தங்கத்தின் விலை அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வழக்கமான நகை விற்பனையை காட்டிலும் அக்ஷய திரிதியை நாளில் 20% விற்பனை குறைய உள்ளதாக அகில இந்திய நகை வணிகர் கவுன்சில் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ15 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5665க்கும், சவரனுக்கு 120 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ45,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.81.30 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ81300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!