மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ80 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2 நாட்களாக சற்றே குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை மாா்ச் 20ம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், மாா்ச் 21 ம் தேதி சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 66,160-க்கும், மாா்ச் 22 ம் தேதி மீண்டும் சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 65,840-க்கும், மாா்ச் 23ல் விலை மாற்றமின்றியும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி மார்ச் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 8,185-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 65,480-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,195-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று கிராமுக்கு 10 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109.90-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!