ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை நேரத்தில் ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.1,040 அதிகரித்து விலை புதிய உச்சத்தை தொட்டது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்கள் தங்கம் விலையை தொடர்ந்து மேலே தள்ளி வருகின்றன.
இந்த வார தொடக்கமான திங்கட்கிழமை ஒரு சவரன் ரூ.1,07,600க்கு விற்கப்பட்டது. அடுத்த நாளே ரூ.3,600 உயர்ந்து ரூ.1,11,200 ஆனது. 21ஆம் தேதி காலை கிராமுக்கு ரூ.350, சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.1,320 உயர்ந்து ஒரே நாளில் ரூ.4,120 உயர்வுடன் ரூ.1,15,320க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் சிறிதளவு சரிவு ஏற்பட்டதால் சவரன் விலை ரூ.1.14 லட்சத்துக்கு கீழ் சென்றது. நேற்று காலை ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ரூ.1,16,400க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்து, கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்து, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.360க்கும், கிலோ ரூ.20,000 உயர்ந்து ரூ.3.65 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
