குட் பேட் அக்லி வில்லன் நடிகர் கைது... திரையுலகில் பெரும் பரபரப்பு...!

 
ஷைன் டாம் சாக்கோ

 தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்படும் நடிகர் அஜீத்குமார் . சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தில், வில்லனாக நடித்த பிரபல மலையாள நடிகர், ஷைன் டாம் சாக்கோ கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர், ஷைன் டாம் சாக்கோ. இவர் 2022ல் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். தசரா, தேவரா உட்பட சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஷைன் டாம் சாக்கோ

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்த இவர், மலையாளத்தில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே, போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

காவல்துறையினர் பல மணி நேர அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷைனுக்கு விரைவில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஹோட்டலில் இருந்தபோது போலீசார் சோதனை செய்ய வந்ததுபோது இவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

 

இது குறித்து விசாரணை நடத்தியபோது, தனது வளர்ச்சி பிடிக்காத யாரோ தன்னைத் தாக்க வருகிறார்கள் என நினைத்து ஹோட்டலில் இருந்து தப்பி ஓடியதாக ஷைன் டாம் சாக்கோ போலீசாரிடம் கூறியுள்ளார். போதைப்பொருள் சோதனையின் போது ஹோட்டலை விட்டு வெளியே ஓடியதற்கான காரணத்தை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

ஷைன் டாம் சாக்கோ

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவர் இன்று காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். மற்றொரு நாள் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் நடத்திய போதைப்பொருள் சோதனையில் ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் அறையை ஆய்வு செய்ய வந்தபோது, நடிகர் ஜன்னலிலிருந்து ஏறி ஹோட்டல் வரவேற்பறை வழியாக தப்பிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

போதைப்பொருள் பயன்பாடு குறித்த தகவலின் அடிப்படையில் கொச்சி போதைப்பொருள் தடுப்பு ஏசிபியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடிகையின் புகார் குறித்து ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், போதைப்பொருள் குறித்து நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கேரளா நடிகர் சங்கம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web