அன்பின் மகிமையை பறைசாற்றும் புனிதவெள்ளி!

 
இயேசு கிறிஸ்து

இன்று உலகம் முழுவதும் புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். மக்களின் பாவங்களையும், துன்பங்களையும் களைய தம்மை சிலுவையில் அர்ப்பணித்துக் கொண்டார். அவரது மகிமையை நினைவு கூரும் வகையில் புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றிலிருந்து 3ம் ம் நாள் அதாவது ஞாயிற்று கிழமை உயிர்த்தெழும் நாள் ஈஸ்டர் தினம் கொண்டாடப்படும். 
 

புனிதவெள்ளி

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினருடன் நமது அன்பையும், சமாதானத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பண்டிகைக்கும்‌ நிச்சயமாக ஒரு காரணம்‌ இருக்கும்‌. அந்த வகையில்‌ ‌ புனித வெள்ளி இயேசு சிலுவையில்‌ மரித்ததையும்‌. அவர்‌ அடைந்த துன்பங்களையும்‌ நினைவு கூறும்‌ விதமாக அமைந்த விழா .

 இயேசு கிறிஸ்து

இயேசவின்‌ சீடரான யூதாஸ்‌ 30 வெள்ளி பணத்திற்காக அவரை காட்டி கொடுத்தார்‌. பின்‌ஜெருசலத்தில்‌ உள்ள காவலர்களால்‌ கைது செய்யப்பட்டார்‌. தலையில் முள்‌ கிரீடம் அணிந்து சிலுவையை சுமந்து கல்வாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர்‌ சிலுவையில்‌ அறையப்பட்டு உயிர்‌ நீத்தார்‌.இயேசு சிலுவையில்‌ அறையப்பட்ட நாள்‌ வெள்ளிக்கிழமை எனவும், உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web