குட் நியூஸ்.. குறைந்தது கொரோனா.. தமிழகத்தில் 32 மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்!

 
கொரோனா

உலகம் முழுவதுமே கோரத்தாண்டவமாடிய கொரோனா ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், இந்தியாவிலும் பரவும் அபாயம் ஏற்படுமோ என்கிற கலக்கத்தில், இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 32 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 35,94,668 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில்  2 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,93,258 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 7 பேர் குணமடைந்தயுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,56,587 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4,951 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,90,81,070 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

மேலும், தமிழ்நாட்டில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை, இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,049 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web