குட் நியூஸ்... சென்னை முழுவதும் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்.கள்!
சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் ஏ.டி.எம்-க்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான சோதனை முயற்சியாக முதல் கட்டமாக 50 குடிநீர் ஏ.டி.எம்-க்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினால் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளன.

இதில், 150 மில்லி, மற்றும் ஒரு லிட்டர் என 2 வகைகளில் குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வாட்டர் பாட்டில்களை கொண்டு வந்து தண்ணீர் பிடித்துக் கொள்ளும் வகையில் இந்த இந்த ஏ.டி.எம் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த குடிநீர் ஏ.டி.எம்-க்கள் திட்டம் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்-க்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
