புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்.. இனி இந்த சான்றிதழ்கள் எல்லாம் தேவையில்லை! அதிரடி அறிவிப்பு!

 
ப்ரீத்தி வீடு திருச்சி

இது நாள் வரையில் புதிதாக வீடு கட்டுபவர்கள் குடிநீர், மின்சார இணைப்பு பெறுவது எல்லாம் அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை. கட்டிட சான்றிதழுக்காக காலம் தாழ்த்த வேண்டியதிருந்தது. இந்நிலையில், இந்த இணைப்புகளை எளிதாக பெறும் வகையில் புது உத்தரவு வெளியாகியுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் நையா, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தமிழக ஒருங்கிணைந்த மற்றும் கட்டட விதிகள் 2019, விதி 20ன் கீழ், கட்டடங்களுக்கு கட்டட முடிவுச்சான்று இல்லாமல் மின் இணைப்பு வசதி, குடி நீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை  இணைப்பு வசதி வழங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

ப்ரீத்தி வீடு திருச்சி

அதன்படி 12 மீட்டர் வரை உயரமுள்ள குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் (8,070 சதுர அடி) பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள், அனைத்துவித தொழிற்சாலைகள், கட்டட முடிவு சான்றிதழ் பெறுவதற்கு முன்பே மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகள் பெறலாம்.  

ப்ரீத்தி வீடு திருச்சி

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை செய்துபார் வீட்டை கட்டிப்பார் என சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் கட்டட முடிவுச்சான்று வாங்க லோ லோ என இனி அலைய வேண்டாம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர் பொது மக்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web