குட்நியூஸ்... வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள்... சட்டப்பேரவையில் விவாதம்!

 
ரேஷன்

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். 

முக்கிய அறிவிப்பு!! ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது – முழு விவரம் உள்ளே

அந்த வகையில் சட்டசபையில் கேள்வி, பதில் நேரத்தில் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர்.காந்தி, ஏழை எளிய மக்கள் அதிகாலை பணிக்கு சென்று இரவு நேரத்தில் வீடு திரும்புகின்றனர். இதனால் ரேஷன் கடைகளில்  பொருட்களை பெற முடியவில்லை .  நாகர்கோவில் தொகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடமாடும் நியாய விலைக்கடைகள் அமைக்க அரசு முன்வருமா.. ? என கேள்வி எழுப்பினார்.  பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "நாகர்கோவிலில் ஏற்கனவே 31 ரேஷன் கடைகளும்,  10 பகுதிநேரக் கடைகளும் இயங்கி வருவதால் நடமாடும் ரேஷன் கடைகள்  அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை" எனக் கூறியுள்ளார்.  

ரேஷன் சர்க்கரை

இது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "கர்நாடக மாநிலத்தில் எப்போது வேண்டுமானலும் ரேஷன் பொருட்கள் பெறும் வகையில் திட்டம் இருக்கும் நிலையில், அதைப் போலவே தமிழகத்திலும் செயல்படுத்த அரசு முன்வருமா..?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  செங்கோட்டையனுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, "ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் குறித்து மார்ச் 20ம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் பார்வையிட இருப்பதாகவும், அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்  இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?