இன்று பெண்களுக்கு அரசு விடுமுறை! ரூ.750 கோடி வட்டியில்லா கடன்... அசத்துது தெலுங்கானா அரசு!

இன்று தெலுங்கானா மாநிலத்தில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அரசு அலுவலகங்களில் பணி புரியும் அனைத்து மகளிருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி, சர்வதேச மகளிர் தினத்திற்கான வாழ்த்து செய்தியுடன், செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் இன்று மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் இன்றைய தினம் முழுவதும் சம்பளத்துடன் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
அத்துடன் இன்று ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனுதவிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா முழுவதும் இருந்து பெண்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க