அரசு மருத்துவமனையின் அலட்சியம்.. செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் நிறைமாத கர்ப்பிணி குழந்தையுடன் மரணம்!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததால் செவிலியர்கள் மருத்துவருக்காக காத்திருந்து, பின்னர் வேறு வழியின்றி பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிங்காரகோட்டை பகுதியில் வசித்து வருபவர் கோபி. இவர் கேரள மாநிலத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜாகிரா(30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில், நேற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாகிராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர்.
அங்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில், அவசரம் கருதி தாயையும், சேயையும் காப்பாற்றும் முயற்சியில் செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். திடீரென கர்ப்பிணி பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜாகிராவை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள சிசுவுடன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஜாகிராவின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்படுள்ளது. இது குறித்து பெண்ணின் சகோதரர் மற்றும் தாய் இருவரும் கூறுகையில், காலையில் 6 மணிக்கு மருத்துவமனையில் பிரசவ வலி என்று சேர்த்தோம். அப்போது செவிலியர்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர். திடீரென எனது மகள் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் வயிற்றை பிடித்து செவிலியர்கள் அமுக்கினார்கள்.
அடுத்து ஆம்புலன்ஸில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என் தங்கையுடன் வயிற்றில் இருந்த பெண் குழந்தையும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இது போன்ற சம்பவங்கள் வேறு யாருக்குமே நடைபெறக் கூடாது. உடனடியாக 3 செவிலியர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என அழுதுக் கொண்டே கூறினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!