ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல்... நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை!
ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல், நெருங்கும் தேர்தல் வியூகங்கள், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் என பரபரப்பான சூழலில் நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

நாளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. ஜனவரி 20-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், பட்ஜெட் தாக்கல் தொடர்பாகவும் விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
