அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு... சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு !

தமிழகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இதற்கு முன்பு இருந்த விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெண்களுக்கு ரூ.10,000 ஆண்களுக்கு ரூ.6,000 என வழங்கப்பட்டு வந்த நிலையில் அதை பல மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!