அரசு பேருந்து ஓட்டுநர் அட்டூழியம்.. மருத்துவரை தாக்கி அடாவடி.. வைரல் வீடியோ!

 
அரசு பேருந்து ஓட்டுநர்

ஆட்சியும், அதிகாரமும் நல்லவர்களிடம் சென்றால் தான் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். லோக்கல் வட்ட செயலாளரில் துவங்கி, கவுன்சிலர், மாவட்டம், எம்.எல்.ஏ., அமைச்சர்., எம்.பி., என எல்லா ஆட்சி காலத்திலுமே அடாவடி செய்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டவாலியை தனது ஷூக்களை எடுத்து வைக்க சொன்ன கலெக்டர் போன்றவர்கள் அதிகாரம் யார் கைகளில் செல்லக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.

அதிலும், அரசு ஊழியர்கள் செய்கிற அடாவடித்தனம் எல்லாம் வேற லெவல். பதிவுத்துறை, மின்சாரம், தாலுகா அலுவலகம், மருத்துவமனை போன்றவற்றில் இவர்கள் செய்கிற அலப்பறைகளுக்கு அளவேயில்லை. இந்நிலையில், சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனியார் மருத்துவர் ஒருவரை ஆபாசமாக பேசி கடுமையாக தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி  வைரலாக பரவி வருகிறது. இது வரையில், அரசு பேருந்து ஓட்டுநரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் சிவா. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இம்மாதம் 11ம் தேதி கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் ட்யூஷன் சென்டரில் இருந்து தனது மகளை அழைத்துக் கொண்டு, தனது மனைவியுடன் காரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார் சிவா. அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு காரை சிவா இயக்கிய போது மாநகரப் பேருந்து ஒன்று காரின் பின்புறத்தில் உரசியதாக கூறப்படுகிறது.

பேருந்து ஓட்டுநரை நோக்கி, ‘பார்த்து போகக் கூடாதா?’ என்று கேட்டு விட்டு, சென்றவர் சூப்பர் மார்க்கெட் அருகில் பொருட்களை வாங்குவதற்காக காரை நிறுத்தி விட்டு தனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த 17டி எண் கொண்ட அரசு பேருந்து, சிவாவின் காரின் மீது மோதி விட்டு, காரை முந்திச் சென்று சாலையின் நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதில் இருந்து இறங்கிய நடத்துனரும், ஓட்டுநரும் அந்த வழியாக வந்த மற்ற மாநகரப் பேருந்துகளையும் சாலையில் நிறுத்த சொன்னார்கள். அவர்களும் அப்படியே பேருந்துகளை நிறுத்தி விட்டு காரில் அமர்ந்திருந்த மருத்துவர் சிவாவிடம் சென்று ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்துள்ளனர். மருத்துவர் முகத்தில் எச்சிலை உமிழ்ந்து, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் சராமாரியாக அடித்து உதைத்தனர். 

மற்ற வாகன ஓட்டிகள், பயணிகள் அனைவரும் சேர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் தடுத்ததால் அவரை எச்சரித்து விட்டு பேருந்தில் சென்று ஏறிய ஓட்டுனரிடம் ஏம்பா இப்படி அடிக்கிறீங்க என்று தட்டிக் கேட்ட பெண்ணை ஆபாசமாக திட்டி விட்டு, பேருந்தை மீண்டும் ஓட்டிச் சென்றார் அந்த ஓட்டுனர்.

fight

இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் மருத்துவர் சிவா புகார் அளித்தார். இதையடுத்து, மறுநாள் 12ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் உங்கள் மீது புகார் அளித்துள்ளனர், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்குதல் நடத்துவதற்கு தூண்டியதாக உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டி இருக்கும் என போலீசார் மிரட்டி உள்ளார்.

நேரில் சென்ற தன்னிடம், தொழிற்சங்கத்தினர் முன்னிலையில் போலீசார் பஞ்சாயத்து செய்ததாக பாதிக்கப்பட்ட மருத்துவர் சிவா வேதனையுடன் தெரிவித்தார். புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாக எழுதிக் கொடுக்கா விட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று போலீசார் அச்சுறுத்தியதால், அவர்கள் சொன்னதை எழுதி கொடுத்து விட்டு வந்ததாகவும், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும், பெண்ணை ஆபாசமாக பேசியதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மருத்துவர் சிவா தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web