பெரும் கொடூரம்.. உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை !

 
மத்தியபிரதேசம்

உடலில் 50 சூடு வைக்கப்பட்டதால் இரண்டரை மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம் ஷதோல் மாவட்டத்தில்  நடந்த கொடூரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஷதோல் மாவட்டத்தின் சிங்பூர் பகுதி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்குள்ள கத்தோடியாவில் வசிக்கும் பெண், உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் இரண்டரை மாதம் பெண் குழந்தையை உள்ளூர் வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளார். 

மத்தியபிரதேசம்

அந்த வைத்தியர் குழந்தையை குணப்படுத்த குழந்தையின் உடலில் 50 சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதில் பச்சிளம் குழந்தை கதறி அழுதுள்ளது. சூடு வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குழந்தை, ஷதோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அதிகப்படியான தீக்காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதை தொடர்ந்து குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனினும் இந்த கொடூரம் குறித்து குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், மருத்துவமனை தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் அளிக்கவில்லை. ஏன் தகவல் கூட தெரிவிக்கப்படவில்லை.

மத்தியபிரதேசம்

இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அதன் அடிப்படையில் அந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வைத்தியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web