தோசைக் கரண்டியால் கணவன் அடித்துக் கொலை..!! நாடகமாடிய மனைவி!!

 
ஜோதிமணி

ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்தில் ரவிக்குமார் (42)- ஜோதிமணி (36) தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி இரவு ரவிக்குமார் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக ரவிக்குமாரின் தந்தைக்கு ஜோதிமணி தகவல் தெரிவித்துள்ளார். 

ரவிக்குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், திருப்பூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் ஜோதிமணி தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஜோதிமணி

மறுநாள் இறுதி சடங்கின்போது, ரவிக்குமாரின் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர், ரவிக்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ரவிக்குமாரின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், ரவிக்குமார் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சந்தேகத்தின்பேரில் மனைவி ஜோதிமணியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தெரிவித்த தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். குடிபோதைக்கு அடிமையான ரவிக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். போதையில், மனைவி ஜோதிமணியின் கை, கால்களில் தோசைக்கரண்டியால் சூடு வைப்பது, கட்டையால் அடிப்பது என சித்ரவதை செய்து வந்துள்ளார்.

ஜோதிமணி

இந்த நிலையில் கடந்த, 22ஆம் தேதி வங்கியில் நகையை அடகு வைத்து, பணம் வாங்கிய ரவிக்குமார் அதில், 4,000 ரூபாய்க்கு மது குடித்து காலி செய்துள்ளார். இதனால், ஆவேசமடைந்த ஜோதிமணி, தோசை கரண்டியால் சரமாரியாக கணவர் ரவிக்குமாரை தாக்கியுள்ளார். இதில் ரவிக்குமார் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து  உடல் நலம் சரியில்லாமல் இறந்ததாக நாடகமாடியுள்ளார் என்பது அம்பலமானதாக விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web