பெரும் கொடூரம்.. காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை.. மருமகள் கவலைக்கிடம்!

 
அனுஷா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் தண்டபாணி என்பவர் தனது மனைவி, மகன் என குடும்பத்துடன் வாழ்த்து வருகிறார். மகன் சுபாஷ் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சுபாஷ், அனுஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக இளைஞர் சுபாஷின் தந்தை தண்டபாணி காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் காதலை கைவிடும்படி சுபாஷிடம் கூறி வந்துள்ளார்.

அனுஷா

இதற்கிடையே பெற்றோரின் எதிர்ப்பை மீறி 3 மாதங்களுக்கு முன்பு அனுஷாவை சுபாஷ் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தபிறகு நேற்று தனது மனைவியுடன் சொந்த ஊரான அருணபதி கிராமத்திற்கு சுபாஷ் வந்துள்ளார். அங்கு அவர் தனது பாட்டியான தண்டபாணியின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்து அங்கு சென்ற தண்டபாணி, காதல் திருமணம் செய்த மகனுடன் தகராறு செய்துள்ளார். எனினும் ஆத்திரம் தீராத அவர் அரிவாளைக் கொண்டு தனது மகன் சுபாஷ், மருமகள் அனுஷா மற்றும் தாய் கண்ணம்மா ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடினார்.

அனுஷா

இந்த தாக்குதலில் சுபாஷ் மற்றும் கண்ணம்மா இருவரும் உயிரிழந்தனர். அனுஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் தண்டபாணியை தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்ததால் மகனையும், ஆதரவு கொடுத்த தாயையும் ஒருவர் வெட்டிகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி பகுதியில் காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற இளைஞரை, பெண்ணின் தந்தை வெட்டிக்கொலை செய்த சம்பவம் கடந்த மாதம் நிகழ்ந்தது. இந்த கொடூரம் முடிந்து ஒரு மாதம் ஆவதற்குள் அடுத்த கொலை நடந்துள்ளது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web