பெரும் கொடூரம்.. வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை !

 
பெண்

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தலித் இன மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு குடியிருப்பில் பெண் ஒருவர் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஷகுர்கான் (30) என்பவர் திடீரென அப்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் சத்தம் போடுவதற்குள் மிரட்டி அந்த பெண்ணை ஷகுர்கான் பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவரது வாயில் கெமிக்கலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றார். அதன்பிறகு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிமக்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். 

பெண்

ஆனால் அதற்குள் அவருக்கு 50 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டன. மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். 

பெண்

எனினும் இறப்பதற்கு முன்பாக அந்த பெண்ணிடம், உள்ளூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலத்தை பதிவு செய்தார். மேலும் இறந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வழக்குபதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசிட் அல்லது வேறு ஏதேனும் ரசாயணப் பொருள் வீசப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷகுர்கானை போலீசார் கைது செய்தனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web