பெரும் பரபரப்பு... திருமண நாளில் காணாமல் போன மணமகன்…. பெண் வீட்டார் இளைய மகனை பிணைக்கைதியாக பிடித்து வைத்து நகை, பணம் கொள்ளை!

இது குறித்து அவரது தந்தை வீட்டில் சேமித்து வைத்த பணத்தை எடுக்க வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பவில்லை. பலமுறை தேடியும் எங்கேயும் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமண நேரம் நெருங்கியதால், பெண் வீட்டார் அதே குடும்பத்தில் உள்ள இளைய சகோதரர் விஷ்ணுவை மணமகனாக அழைத்து வரும்படி வேண்டுகோள் விடுத்தனர். விஷ்ணுவும் உறவினர்கள் ஊர்வலமாக வந்தபோது, மணப்பெண் வீட்டார் கடும் எதிர்வினை காட்டினர்.
நொந்த மனதுடன் இருப்பதாக கூறிய அவர்களது உறவினர்கள், திருமணக் கூட்டத்தினரை பிணைக் கைதியாக வைத்திருந்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் நகைகளை பறித்தனர். தொடர்ந்து அவர்களை தாக்கியதும், திருமணத்தை நடத்தாமல், மணமகளையும் கொடுக்காமல், வெறுமனே ஊர்வலத்தை திருப்பி அனுப்பியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மணமகன் வீட்டார் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், பிணைக் கைதி வைத்தல், தாக்குதல் மற்றும் கொள்ளை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, காணாமல் போன நீரஜ் குமாரை தேடும் பணியில் ஜுனாவாரி காவல் நிலையமும் ஈடுபட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இரு தரப்பிடமும் நேர்மையாக விசாரணை நடைபெறும். குற்றவாளிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!