அடுத்தடுத்து 11 பேர் மீது காரை மோதிய பிரபல ரவுடி ... ஒருவர் பலி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மன் கோவில் மற்றும் அருகிலுள்ள தெற்குத் தரவை கிராமத்தில் வசித்து வருபவர் சாத்தையா (55), சிவா (35), பழனி குமார் (30) . இவர்கள் பரமக்குடி பொன்னையாபுரத்தில் வசித்து வரும் ராமநாத பிரபுவின் கார் மீது உப்பு ஏற்றிச் சென்ற லாரி உரசியதில் கார் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது தொடர்பாக லாரி உரிமையாளருக்கு ஆதரவாக பேசினர். இதனால் இரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அம்மன் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்ததின் காரணமாக ராமநாத பிரபு ஐ20 காரை எடுத்து கொண்டு அந்த இடத்திலிருந்து 200 மீட்டர் சென்றவர் மீண்டும் வேகமாக வந்து கூட்டத்தின் மீது வேண்டுமென்றே நின்று கொண்டவர்கள் மீது காரை வைத்து ஏற்றி உள்ளார். இதில் 12 பேர் படுகாயம் அடைந்தவர்கள். இவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட சாத்தையா என்பவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு செல்லும் முன்பு வரும் செல்லும் வழியில் உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!